பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சலோம்

களிலிருந்து ஒடி காடுகளிலே மரங்களுக்கிடையில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

சலோம் :

கத்தியது யார்?

இரண்டாவது வீரன் :

முற்றுணர்ந்தோன் அரசி.

சலோம் :

முற்றுணர்ந்தோனா? மன்னன் அஞ்சும் அந்த அறிவனா? இரண்டாவது வீரன் :

அது எங்களுக்குத் தெரியாது. ஆனால், இப்போது பேசியவன் முற்றுணர்ந்தோன்தான்.

சிரியா இளைஞன் :

இளவரசி, பல்லக்கைக் கொண்டுவரச் சொல்லட்டுமா! இன்றிரவு பூங்கா இன்பமயமாக இருக்கிறது.

சலோம் :

அவன் எனது அன்னையைப்பற்றி அஞ்சத்தக்க செய்திகளைச் செல்லுகிறான், அல்லவா?

இரண்டாவது வீரன் :

அவன் சொல்லுவது எங்களுக்கு விளங்குவதே இல்லை.

சலோம் :

ஆம், அவன் என் அம்மாவைப் பற்றி அஞ்சத்தக்க ஏதேதோ சொல்லுகிறான்.

(ஒர் அடிமை வருகிறான்)