இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25 சலோம்
களிலிருந்து ஒடி காடுகளிலே மரங்களுக்கிடையில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
சலோம் :
கத்தியது யார்?
இரண்டாவது வீரன் :
முற்றுணர்ந்தோன் அரசி.
சலோம் :
முற்றுணர்ந்தோனா? மன்னன் அஞ்சும் அந்த அறிவனா? இரண்டாவது வீரன் :
அது எங்களுக்குத் தெரியாது. ஆனால், இப்போது பேசியவன் முற்றுணர்ந்தோன்தான்.
சிரியா இளைஞன் :
இளவரசி, பல்லக்கைக் கொண்டுவரச் சொல்லட்டுமா! இன்றிரவு பூங்கா இன்பமயமாக இருக்கிறது.
சலோம் :
அவன் எனது அன்னையைப்பற்றி அஞ்சத்தக்க செய்திகளைச் செல்லுகிறான், அல்லவா?
இரண்டாவது வீரன் :
அவன் சொல்லுவது எங்களுக்கு விளங்குவதே இல்லை.
சலோம் :
ஆம், அவன் என் அம்மாவைப் பற்றி அஞ்சத்தக்க ஏதேதோ சொல்லுகிறான்.
(ஒர் அடிமை வருகிறான்)