ஆசுகர் ஒயில்ட்டு 50
ஒரு பாரிசியன்:
தேவதைகள் இருக்கின்றன. ஆனால், அறிவன் சோகனான் அவற்றுடன் பேசினான் என்பதை நான் நம்பவில்லை.
முதல் நாசரீன் :
அவன் மலைமுடிகளிலே தேவதைகளுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பெருந் திரலான மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஒரு சடுசியன் :
தேவதைகளுடன் இல்லை. எரோதியாக :
ஆ என்னென்ன பேசுகிறார்கள் இவர்கள் மிக்க களைப்பை உண்டாக்குகிறார்களே (பணியாளனை நோக்கி) விசிறி, விசிறி (பணியாளன் விசிறியைக் கொடுக்கிறான்) கனவு கண்டவனைப் போல இருக்கிறதே உன் முகம், கனவு காணாதே. (விசிறியால் பணியாளனை அடிக்கிறான்.) இரண்டாவது நாசரின் :
இன்னொரு புதுமை இருக்கிறது.
மன்னி :
இவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. நிலவினை வெகுநேரம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அல்லவா? முதல் நாசரீன் :
சேருசுட்ைய புதல்வி இறந்துபோனாள், முற்றுணர்த்தோன் அவளை எழுப்பினான்.
மன்னன் :
செத்தவர்களையா பிழைக்கவைக்கிறான்? முதல் நாசரீன் :
ஆம், அரசே!