பக்கம்:சாதரண உணவுப் பொருள்களின் குணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 கற்பாசி-மேக நோயை குணப்படுத்தும் - அதிசாரத் தைக் குறைக்கும். கஸ்தூரி மஞ்சள்-இதை அரைத்து தேய்த்துக் குளிக்க காப்பான் குணமாகும். காசினிக் கீரை--ரத்த சுத் தி செய்யும் - உடல் வெப்ப த்தை நீக்கும், வீக்கத்தைப் போக்கும். யூனுனி வைக் தியர்கள் இதை மிகவும் போற்றுகின்றனர். காப்பிக்கொட்டை-அவ்வளவு நல்லது அல்ல-நீரைப் பெருக்கும் மலக்கைக் கட்டும்-கக்குவாய்க்கு நல்லது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 40 வயதுக்குமேற் பட்டவர்களும் இதை உபயோகிப்பது நல்ல தல்ல. துரக்கத்தை குறைக்கும் - நீர்வியாதிக்காரர்கள் இகை சாப்பிடவேண்டியது அவசியமானல், சர்க்கரை சேர்க்காது புசிக்கவும். காய்ச்சுக்கட்டி-காசுக்கட்டி என வழங்கப்படுகிறதுபற்களுக்கு நல்லது - வெற்றிலேயுடன் புசிக்கவும். கார்போகா அரிசி-சொறி சிரங்கை நீக்கும் - கரப்பா அணுக்கு நல்லது - (இதை உணவாகப் புசித்தல் நல்ல கல்ல-பித்தத்தைப் பெருக்கும்; அரைத்து மேலுக்குப் பூசுகல் நல்லது.) காராமணி-அபத்திய பதார்த்தம் - சொறி சிாங்கை உண்டாககும் - மூத்திரத்தைப் பெருக்கும். காரெட் - (Carrot) (சிகப்பு முள்ளங்கி) உடம்பிற்கு நல்லது இதைப் பச்சையாகப் புசித்தல் நலம். சமைத் தால் இதிலுள்ள உயிர் சத்துகள் குன்றுகின்றன; இதில் (ஏ) (பி) (கி) உயிர் சத்துகள் இருக்கின்றன. இதில் அயோடினு மிருக்கிறது. மஞ்சள் முள்ளங்கி நல்ல உணவாம். ஒரு காரெட்டில் 25 காலெரி சக்தி யுண்டு. காருக்கருணை-நல்ல உணவாம் - வாய்வு நோய், ரத்த மூலம் இவைகளுக்கு நல்லது - பலம் கரும்; உயிர்சத்து (இ) உடையது.