பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடுப்பன. நம்மைத் தாழ்த்திக் கொண்டிருக்கும் குல சமயப் பூசல்கள் ஒழியும் வரை தம்பி! நாம் முன்னேறி விட்டோம் என்று சொல்ல முடியாது. மனத்தில் அழுக்குகளையும் அறிவில் இருளையும் வைத்துக்கொண்டு உடலில் குலக்குறிகளையும் சமயக் குறிகளையும் இட்டுக்கொள்வது மிகவும் அருவருப்பாகும்.

தம்பி, நாம் எல்லாரும் ஒரே இனம் என்று எண்ணு! சாதிப் பிரிவை வெளிப்படுத்தும் குறிகளை விலக்கு. சமயப்பிரிவைப் பறைசாற்றும் குறிகளை அகற்று. அகமும் புறமும் தூய்மையாக இருக்கட்டும். நம்மில் எவ்வகையிலும் இழிவு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டிருக்கும் தீய கொடும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டிய இழிவுகளுள் முதலாவதாகும். அதனை உடனே களைந்தெறி!

தமிழ்ச்சிட்டு குரல்-3 இசை-8, 1969)

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/45&oldid=1164359" இலிருந்து மீள்விக்கப்பட்டது