பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தினமணிக் கதிரின்
சாதிவெறித் தூண்டுதலை முதலமைச்சர்
உடனே தடுத்து நிறுத்தவேண்டும் !

'தினமணிக் கதிர்' என்னும் இதழ், தன் விற்பனையைப் பெருக்கும் நோக்கத்துடன், மக்களிடையே, திராவிட இயக்கங்களின் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அரிய முயற்சியால், ஓரளவு மறைந்து வருகின்ற சாதியுணர்வைத் தூண்டிவிடும் வகையில், சாதியின் பெயரால் சிறப்பிதழ்களை வெளியிட்டு வருவதும், அவ்விதழ்களை வெளிக்கொணர்வதற்கும் அதன் ஆக்கத்திற்கும் உதவும் வகையில் அவ்வச் சாதிகளைச் சேர்ந்த பேதையினரும் சாதிவெறியினரும், தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றிய செய்திகள், தங்கள் சாதிகளைச் சேர்ந்த பெரிய 'பெரிய' அறிவாளித்தனங்களை - செல்வத்தனங்களைக் கொண்ட மக்களைப் பற்றிய விளத்தங்களையெல்லாம் பெருமை(!)யுடன் எழுதி அனுப்புவதும், பின்னர் அவ்விதழ்கள் வெளியானதும் அவற்றைப் போட்டியிட்டுக் கொண்டு படிப்பதும், இதனால் அவ்விதழ் நிறுவனர் கொள்ளை ஊதியம் அடித்துக் கொழுப்பதும் நடுவூரில் நச்சுமரம் செழிப்பதுபோல் நாளும் நடந்து வருகின்றன. இச்செய்தியை அரசு உள்பட அனைவரும் அறிவர்.

ஆனால், பெயருக்காவும், ஏதுமறியாப் பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவும் என்றே, பெரியாரின் பெயரால் கடந்த ஓராண்டுக் காலமாக விழாக் கொண்டாடிக் கொட்டமடித்த அமைச்சர்களும், அதிகாரிகளும், அவரின் சாதியொழிப்புக் கொள்கைக்கு நேர்மாறாக நடந்து வரும் இக் கொடுமையான உணர்ச்சிப் பரவலையும், மக்களின் மென்மையுணர்ச்சிகளைத் தூண்டிப் பணம்பறிக்கும் இப் பகற்கொள்ளையடிப்பையும், கண்டுங் காணாதவர் போல், அல்லது தடுத்து நிறுத்த

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/53&oldid=1165240" இலிருந்து மீள்விக்கப்பட்டது