பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
தினமணிக் கதிரின் திமிரான போக்கு !
 

மீண்டும் தீபம் நா.பார்த்தசாரதி தமிழினத்திற்குக் கேடான சில தில்லு மல்லுகளில் இறங்கியிருக்கிறார். பார்ப்பனர்க்கே உள்ள இயல்பான குறும்புகள் - எவ்வளவு, படித்தாலும் அவர்களை விட்டுப் போகாது என்பதற்குத் 'தினமணிச்' சிவராமன்களும், 'தீபம்' பார்த்தசாரதிகளும், 'துக்ளக்' சோக்களும் என்றென்றும் எடுத்துக் காட்டுகளாகவே இருப்பர். அண்மையில் தீபம் பார்த்தசாரதி, தமிழ் மக்களிடையே அழிந்து வரும் சாதிவுணர்வை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் அல்லது தூண்டிவிடும் வகையில், அவர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தும் தினமணிக் கதிரைச் சாதித் சிறப்பிதழ்களாக வெளியிட்டு வருகிறார். செளராட்டிரா சிறப்பிதழ், நகரத்தார் சிறப்பிதழ் என இரண்டு சிறப்பிதழ்களை இதுவரை தினமணிக் கதிர் வெளியிட்டுருக்கிறது. இனி அடுத்து 'ரெட்டியார் சிறப்பிதழ்' வெளிவருவதாக அறிவிப்பு வந்துள்ளது. சாதியின் பெயரால் இன்னும் என்னென்ன சிறப்பிதழ்களைக் கொணர விருக்கிறாரோ நமக்குத் தெரியாது.

பெரும்பாலும் பார்ப்பனர்கள் மற்றவர்களைச் சாதியின் பெயரைச் சொல்லி அழைப்பதிலேயே மிகவும் விருப்பமானவர்கள். என்ன ரெட்டியார், முதலியார் எங்கே காணோம், பிள்ளை அந்த வேலையைச் செய்தாரா, செட்டியாருக்கு என்ன குறைச்சல், கவுண்டருக்கு எப்படி அவ்வளவு கோபம் வந்தது, இருந்தாலும் நாய்க்கர் இவ்வளவு அமர்க்களம் செய்திருக்கக் கூடாது என்ற வகையில்தாம் பார்ப்பனர் பேச்சுக்களில், வக்கணைகள், ஏசல்கள், குத்தல்கள் இருக்கும் இதற்கு என்ன கரணியம் என்றால், மற்றவர்களுக்கு அந்தந்தச் சாதி மறந்து போகாமல் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதொன்று; இரண்டாவது அவர்கள் தம்மை என்றென்றும் பிராமணர் என்பதை மறந்துவிடாமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது சூத்திரர்கள் தாங்கள் அனைவரும் ஓரினம் என்பதை உணர்ந்து விட்டால், தங்களைப் பிராமணன் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/55&oldid=1165243" இலிருந்து மீள்விக்கப்பட்டது