120
சான்றோர் தமிழ்
“முழுமை நிலா! அழகு நிலா
முளைத் ததுவிண் மேலே-அது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே
..............................................
குருட்டுவிழியும் திறந்தது போல்
இருட்டில் வான விளக்கு”
இம்மட்டோடு நிற்கவில்லை கவிஞர். பிறிதோரிடத்தில் பசித்த மக்கள் பசியாற உண்ண உணவு தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண் சோற்றினைக் காணும் இன்பமே வெண்ணிலவைக் காணும் இன்பம் என்று வாழ் வோடு ஒப்புமைப்படுத்திக் காண்கின்றார்,
“உனைக்காணும் போதினிலே என் உள்ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு
நினைத்தாலும் வார்த்தை கிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”
புரட்சிக் கவி
பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக் கவி’ என்றே ஒரு நெடுங்கவிதையினைப் படைத்துள்ளார். பெயருக்கேற்பவே . இந்நெடுங்கவிதையில் பல்வேறு புரட்சிக் கருத்துக்கள். நிறைந்திலங்கக் காணலாம்.