பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுவை தந்த புரட்சி கவிஞர்

121



“காரிருளால் சூரியன்தான்
மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ?
பிறர் சூழ்ச்சி செக்தமிழை
அழிப்ப துண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு
மறைந்து போமோ?”

என்று ‘புரட்சிக் கவி’யில் முழங்குகின்றார் கவிஞர்,

முதலாவது நால்வருணம் என்று மக்களைப் பிரித்து வைத்த கயமைப் பண்பினைச் சாடுகின்றார் :

“சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம்

ஏனிரங்கும்?”

என்று கேள்விக் குரல் எழுப்புகின்றார்.

ஏற்றக் குறைவற்ற இனியதொரு சமுதாயத்தினைப் படைப்பதே நோக்கமாக இருக்கவேண்டும் எனப் புரட்சிக் கவியிடம் அவன் காதலி அமுதவல்லி கூறக் காண்க :

“சாதி உயர்வென்றும்
தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப
பொதுத்தொழிலாளர் சமூகம்

சா–9