பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுவை தந்த புரட்சிக் கவிஞர்

123


சமுதாயப் புரட்சிக் கருத்துகள்

பாரதிதாசன் அவர்களின் நோக்கு. பெரிதும் சமுதாயச் சீர்திருத்தத்தினை நோக்கியே சிந்தித்துச் செயல்பட்டது எனலாம். சமுதாயத்தினைப் புரட்டிக் கீழ் மேலாக்கிப் புதுமையினைப் புகுத்திப் புதியதொரு மறுமலர்ச்சிச் சமுதாயத்தினைக் காணவேண்டுமென்று தம் வாழ்நாள் இறுதிவரையில் அயராது பாடுபட்டவர் அவராவர்.

மகளிர் சமுதாயத்தின் சரிபாதிப் பகுதியாவர்; ஏன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர் அவரேயாவர். இறைவனையே உமையொருபாகனாகக் கண்ட இத்திரு நாட்டில், ‘இல்லாள்’ என்றும், ‘வாழ்க்கைத்துணை’ என்றும் திருவள்ளுவர் மகளிரைப் போற்றியெழுதிய இத்திருவிடத்தில். மகளிர் நிலை மதிப்பிற்குரியதாக இல்லை என்று பாடுகிறார், பாவேந்தர் அவர்கள்.

“ஆடை அணிகலன்,
ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச்
சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும்
ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக்
கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில்
வலிவற்ற ஒர்பகுதி”

—பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி :
—வீரத்தாய்

எனவே பெண் கல்வி இன்றியமையாதது என்பதனை,