பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சான்றோர் தமிழ்



“கல்வியில் லாதபெண்கள்
களர்நிலம் அங்கிலத்தில்
புல்விளைந் திடலாம்! நலல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை யுடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்”

—குடும்ப விளக்கு : இரண்டாம் பகுதி.

என்று திறமாகக் குறிப்பிட்டு, தந்தை பெண்ணுக்குக் கூறும் ‘இசையமுது’ பாடலில்,

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள்
உன் அன்னை”

என்று பெண் கல்வியின் இன்றியமையாமையினைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துப் பெண்ணுரிமை வேண்டி முதன் முதலில் கவிதையில் புரட்சி செய்தவர் என்பது கீழ்க்காணும் பாடற் பகுதியால் விளங்கும்.

“பெண்ணுக்குப் பேச்சுரிமை
வேண்டாம் என் கின்றீரோ? -
மண்ணுக்குக் கேடாய்
மதித்திரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும்
பேசுங் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல்
முயற்கொம்பே!”

—சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.