பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

43

மாதச் சம்பளம் தருவதில் உள்ள நடைமுறை ஊழல்களையும் விவரித்துக் கொண்டிருந்தாள்.

“படிக்கிற குழந்தைகளிடம் ரசீது தராமல், பணம் கறக்கப்படுகிறது. வேலை பார்க்கிற ஆசியகைளுக்குச் சம்பளப் பட்டியலில் கண்டதைவிடக் குறைவாகப் பணம் தரப்படுகிறது: இங்கேயும் கொள்ளை; அங்கேயும் கொள்ளை.”

“மாதா மாதம் சம்பளத்தில் லஞ்சப் பணம் விட்டுக்கொடுத்தாவது. வேலையில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஆசிரியர்களாகிய நீங்களும் ஒத்துழைப்பதால்தானே லஞ்ச ஊழல் நடைபெறுகிறது?”

என்று சற்றுக் கடுமையாகவே எதிர்க் கேள்வி போட்டான் பரமசிவம்.

சித்ராவின் தோழியும் உடனே பதில் கூறினாள்;

“இதற்கு ஒத்துழைத்து அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்ளாவிட்டால் யாரும் யாருக்கும் வேலையே தீரம”

“இந்த நாட்டில் இன்று வளரும் லஞ்ச ஊழல்கள் அனைத்தும் கொடுப்பவர், பெறுபவர் இருவரும் ஒத்துழைத்துத்தான் நடக்கின்றன. வாங்குபவர் மட்டுமே முழுக் குற்றவாளி என்று சொல்லி விடுவதற்கில்லை. கொடுப்பவரும் ஒத்துழைத்து ஆசீர்வதிக்கவே செய்கினர் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

“என்ன செய்வது? நிர்ப்பந்தம் அப்படி இருக்கிறது. இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது” என்றாள் சித்ராவின் தோழி.

அந்தக் கூடத்தில் பளீரென்று மாட்டப்பட்டுச் சுவரில் பூச்சரம் அணியப் பெற்றுத் தொங்கிய ஒரு முதியவரின் படத்தில் லயித்தது பூமியின் பார்வை.