பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சாயங்கால மேகங்கள்

"சரிதான்! இப்படியே போனா, கள்ளக் கடத்தல்காரங்க சண்டைக்கு வந்துடுவாங்களோன்னு பயந்து கடத்தல்காரங்களை விமரிசனம் பண்ணி டி. வி. யிலே எதுவும் சொல்ல முடியாது. சமூக விரோதிகளான திருடர்கள், கொள்ளை லாபக்காரர்கள், கொலை, கற்பழித்தல் குற்றங்களைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஆகிய யாரையும் எதிர்த்து டி. வி. யில் எதுவுமே பண்ண முடியாது.”

“என்ன சார் பண்றது! சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கலை, இலக்கியச் சாதனங்கள் எல்லாமே அப்படித் தான் இருக்கின்றன” என்று குறைப்பட்டுக் கொண்டாள் சித்ரா. தன் தோழியைப் பூமிக்கும் பரமசிவத்துக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“இவள் என் சிநேகிதி; தேவகி. என்னுடன் சக ஆசிரியையாக அருள்மேரி ‘கான்வென்டில்’ இவளும் வேலை பார்க்கிறாள். திருவல்லிக்கேணியிலே இருக்கிறாள்.

பேச்சுவாக்கில் சித்ரா பரமசிவத்திடம் வேறு ஓர் உதவியை வேண்டினாள்.

“அப்பா இருக்கிறப்பவே. இந்த வீட்டுக்காரர்கள் காலி பண்ணச்சொல்லித் தொந்தரவு பண்ணினாங்க. அப்பா போயாச்சு, என்னாலே தன்னந்தனியா, இவங்களோட இங்கே சண்டை போட முடியாது. காலி பண்ணிடலாம்னு நினைக்கிறேன். மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணா மலைபுரம்-எங்கேயாவது கொஞ்ச வாடகையிலே ஒரு போர்ஷன் அல்லது சின்ன அவுட் ஹவுஸாப் பார்த்தால் தேவலை.”

“நீங்க சொல்ற ஏரியா எல்லாம் பூமிக்குத்தான் நல்லாப் பழக்கம். பூமியிடம் சொல்லுங்க, நாளைக்கே நல்ல இடமாய் பார்த்து முடிச்சுத் தந்துடலாம்” என்றான் பரமசிவம்.

காலையில் எங்க நெருங்கின உறவுக்காரர் ஒருத்தர் சேலத்துலே இருந்து அப்பா. போனதுக்காகத் துக்கம் கேக்க