பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

13


அதனால் பெற்றோர்களுக்கே பெருங் தொல்லை என்று எந்தச் சோதிடனாகிலும் உளறிக் கொட்டியிருந்தாலும், அதற்காக அதையே உண்மையென நம்பி எந்தப் பெற்றோர்களும் கவலைப்படுவதோ, அல்லது அந்த மாதிரி சொல்லப்பட்ட மக்களை வளர்க்கும் கடமையிலிருந்து தவறுவதோ இல்லை. ஏன் அவர்களை இறுகப் பிணைத்திருக்கும் பாசமென்ற கயிறு இரும்பினாலோ, எஃகினாலோ செய்யப்பட்டதல்ல. அன்பெனும் பெரும் பாசத்தால் செய்யப்பட்டதல்லவா? எனவே எப்போதோ வரப்போகும் இன்னல்களுக்கு இப்போதே பயமென்ற சிறையில் வாடிவதங்குவானேன் என்றுதான் யாரும் நினைப்பார்கள்.


இவை இந்தக் கல்லறையில் தாங்கும் மனிதாபிமானியின் சோகமிக்க வரலாற்றிலே கெறிக்கும் கருத்துச் சிதறல்கள். பலரைப்போலவே பிறந்தான். அவன் பிறக்கும்போது வானம் இரண்டாகவில்லை. வால் நட்சத்திரம் தோன்றவில்லை. கடலில் ஜோதி தோன்றவில்லை. கருவாடு மீனாய்க் கடலில் குதிக்கவில்லை. சந்திரன் குளிர்ச்சியால் செந்தாமரை மலரவுமில்லை. சூரியன் வெப்பத்தால் அது சுருங்கிவிடவுமில்லை. வானவெளியில் தேவமாதா தோன்றவில்லை. வானவர் ஆகாய வீதியில் பவனி வரவுமில்லை. புஷ்ப விமானத்தில் தேவர்கள் பூலோகத்துக்கு வரவுமில்லை. எதிர்காலம் மிகப் பயங்கரமானதென்ற அறிகுறிகளோ இதாலியின் சிங்காதன வைரி என்பதற்கான அடையாளங்