பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டான். நடுங்கினானில்லை. போலிஸ் புலிகளின் பயமுறுத்தல்காரக்கிடையே, அவர் தம் கழுதக் கண்களினூடே அகப்பட்டுத் திரிந்தான் - அஞ்சினானில்லை. ஆனால் அவன உள்ளத்தில் மட்டும் இந்தாலிய நாட்டின் இன்ப வாழ்வுத் திட்டம் - அதில் சத்திர ஆட்சியேற்பட்டு சுபிட்சம் தழைத்து, சுக வாழ்வு மக்கள் வாழ, ஓயாத்திட்டங்கள் வந்து கொண்டிந்தன. சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம் தன்னாலானதைச் செய்ய முயன்றான். பலன். நாட்டைவிட்டு விரட்டப்பட்டான். நாடு கடத்தப்பட்டான். நல்ல திட்டம் தந்தவனை நாடோடியாக வாழ விட்டது இத்தாலியின் அன்றைய யதேச்சாதிகாரக் கும்பல்.

வாழ வழிவதத்துத் தந்தவனை வதைத்து வாட்டுவதுதானே வக்ரபுத்தி கொண்ட கொடுங்கோலரின் ஆட்சயில் நடைபெறும். அவ்வண்ணமே இத்தாலிய சுதந்திரத்திற்குப் பாடுபட்ட மாஜினி, யதேச்சாதிகாரிகளின் கையிலே அகப்பட்டு அவஸ்தைப்பட்டான். அவன் வாழ்வில் கண்டுரைந்த வாழ்க்கை முறைகளையும், அவனது