பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

47


 நெப் : அதிகப்பிரசங்கி, வாயை மூடு. இதை யார் எழுதியது?

ஜோ : நான் தான் எழுதினேன்.

நெப் : நீ எழுதவில்லை என்பது மட்டிலும் எனக்குத் தெரியும்.

ஜோ : அப்படியானால் எழுதியவர்களையும் தாங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே?

நெப் : உஷ். சொல்கிறாயா, இல்லையா?

ஜோ : சொல்லாவிட்டால்?

நெய் : கொல்வேன்.

ஜோ : எழுதியவன் யார் என்று சொன்னால் அவனைக் கொல்வீர்கள். இல்லையானால் என்னைக் கொல்வீர்கள். இரண்டும் ஒன்றுதான். ஜெர்மன் நாட்டான் ஒருவனை ஒருவன் காட்டிக் கொடுப்பதில்லை.

மறுகணமே பிணமானான் ஜோஹென்ஸ்பிலிப்பாம். இந்தக் கைங்கரியத்தைச் செய்து முடித்தான் நெப்போலியன்.

(அந்த உறுதியான உள்ளம்படைத்த ஜோஹன்ஸ் பிலிப்பம் கல்லறைதான் ஹிட்லர் பிறந்த வீட்டுக்கருகாமையிலிருந்தது)