பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சாய்ந்தகோபுரம்



தண்டனையளித்திருக்கிறது. நாளை மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அது உண்மையானல், இத்தாலிய நாடு மாத்திரமல்ல, அகில உலகமே ஓர் ஒப்புயர்வற்ற நண்பனை இழக்கப்போகிறது. இது ஜன நாயக விரும்பிகளுக்கு மாத்திரமல்ல, குடி உரிமை பெற்றிருக்கிற ஒவ்வொருவனுக்கும் ஏற்படும் சரிகட்ட முடியாத கஷ்டமாகும். அந்த வீரன் பின்னால் நம்மைப் போன்ற பலர் இருந்தும் பயனில்லை என்ற தீராப் பழி நமக்குமாத்திரமல்ல, சமாதான விரும்பிகளுக்கும் ஏற்பட்ட சகிக்க முடியாத அவமானமாகும். எடுத்ததற்கெல்லாம் மரண தண்டனையளித்து விடும் மதியில்லாத சர்க்காருக்கு நாம் ஒரு நல்ல பாடத்தைக் கற்பிக்கவேண்டும். இத்தாலி மாத்திரமல்ல, அகில உலகமே அவன் விடுதலைக்குப் போராடுகின்றது. என்ற பேரொளியை எழுப்ப வேண்டும். நாட்டுக்கு விடுதலை பின்பு முன்பு அவனுக்கு விடுதலை வேண்டும் என்ற நமது வீரக் குரலைக்கொண்டு இத்தாலியப் பாராளுமன்ற இரும்புக் கதவுகளைத் தட்டுவோமாக. மாஜினி, மரண தண்டனயிலிருந்து தப்ப வேண்டும் , இதுவே நமது வேண்டுகோள். தவறி அவனைத் தூக்கிலிட்டால், அரசாங்கம் இருக்குமிடம் தெரியாமல் நொறுங்கும். இதுவே எமது எச்சரிக்கை, சமாதானமா சமரா என்பதைச் சொல்ல வேண்டியது அந்தச் சர்க்காரின் பொறுப்பு. பிறகு அதன் இஷ்டம் இதோடு முடிக்கிறேன். வாழ்க மாஜினி! ஓங்குக சுதந்திரம்!