பக்கம்:சாவின் முத்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

சாவின் முத்தம்

தோய்த்து வெகு ஆண்டாச்சாம்!
இதை உனக்குச்
சொல்லச்சொன்னர் அக்கா”
என்றாள் - துள்ளும்

ஆத்திரத்தில் வாய் உரித்தான்
தந்தை. “என்ன
இப்படியா நடக்க
இசைந்தாய்?' என்று
கோத்தெடுத்தாள் சுடு சொற்கள்
அன்னை, அந்தக்
கொந்தளிப்பில் அவள் மிதக்க,
கொண்டைக் கம்பால்
சாத்துதற்கு விரைந்திட்டான்
அண்ணன். வீட்டில்
தங்குதடை இல்லாமல்
பேசலானார்,
ஊத்தை முடிக் கழிசடையுங்
கூட, பேச்சு
ஒன்றிருக்க அதை மாற்றிக்
குகைவாய் காட்டும்.

சாத்திய வாய் திறக்கவில்லை;
வள்ளி. துக்கம்
சாய்த்து நெஞ்சை நனைக்கின்ற
அவளைப் பார்த்து
“தூத்தூத்து!" ஏன் இந்த
விசனம்! குட்டைச்