பக்கம்:சாவின் முத்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சாவின் முத்தம்

சிரிப்பின் நிழல்!

முல்லையிலே சிரிக்கின்றாள்! வான மென்னும்
முகம்பார்க்கும் கண்ணாடி மேனி எங்கும்
நெலநிறத்துப் பட்டாடை போர்த்து கின்றாள்!
நீல மலர் இதழ்வடிவில் அசைந்து பச்சைப்
புல் இனத்தில் ஒளிகின்றாள்! அருவி யாகிப்
புனல்வழித்துச் சிந்துகின்றாள்! அந்த ரத்து
வில்வளைவில் கூத்திட்டுக் கரும்புத் தோளின்
மணிவரியில் முத்துருவம் அடைகின்றாள்! செங்

கண்ணவிழ்த்து நெளிகின்றாள்! இதழ் வரம்பில்
கதிர்பரப்பி அந்தியினைப் படைத்து, காதல்
உண்ணுகின்றாள். படைக்கருவி முகத்தை ரத்த
ஊற்றாக்கிக் களிக்கின்றாள்! காந்தட் பூவின்
வண்ணத்து இளமைவிரற் கொத்தில், தங்க
மயில் நடனம் வைக்கின்றாள்! உத டிமைத்து,
எண்ணத்தை இசையாக்கி, வானம் பாடி
எடுத்துண்ணும் துாற்றலிலே மணியா கின்றாள்!

தன்நிறத்தை இவ்வுலகப் பொருளின் மேலே
தெளித்துவிடல் வேண்டுமெனும் பெருங்
துடிப்பை
மின் உதயம் சரிக்கின்றாள்! குமரித் தென்றல்
விளைவு அவள் இதயப்பூந் தோட்டம்! முத்தம்
தின்னுதற்குத் தளிர்க்கின்றாள்! கண்க லைத்துச்
சீர்திருத்தம் உதிர்க்கின்றாள். ஒளிமன் றத்தில்
இன்ன இடம் கலை! கவிதை இதுதான் ! காதல்
என்பதுவும் இவ்விடந்தான் எனவி ளக்கிக்