பக்கம்:சாவின் முத்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

15


அடிக்கடி உன்னைத் தானே
சந்திக்கும் கிழிந்த உள்ளம்!

தேர்வைக்கும் சிங்கா ரத்தைத்
தெருவெல்லாம் நிரப்பு தல்போல்;
ஊர்ஊராய் அழகு வார்த்து
உடையின்றித் திரிகின்றாயே
ஓர்அணுவுக் கேனும் வெட்கம்
எழவில்லே உடம்பில்? பெண்கள்
நீரிலும் தன் அங்கத்தின்
நிலைகாட்டக் கூசு வார்கள்!


நிழலிலே அழுத்தி வைக்கும்
இருட்டுபோல், நீல மொட்டில்
குழிபோடும் வண்டு, நேற்று
கற்றது தமிழை, இன்று
பழச்சுளை இறங்கும் பாடல்
பலப்பல அதற்குச் சொந்தம்!
பிழையிலாத் தமிழி னோடு
பிறந்தென்ன முகிலே நீதான்!


இலவசத் தில் சிரிப்பைத்
தள்ளுதல், அழகின் மேலே
உலவிட வேசி வைக்கும்
உபாயம்!நீ உணர்வில் லாமல்
மலைமேலே மொய்த்து, நீரை
விதைக்கின்றாய் முத்து முத்தாய்
விலைமகள் அன்னாள்! கெட்டி
வெளுப்புடன் அங்கே போய்ப்பார்