பக்கம்:சாவின் முத்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

17


நலமற்ற மரணச் சேதி
நறுக்கென்று கேட்ப தைப்போல்,
வெலவெலத் தேனே! சேதி
விரித்ததும் சரக்கே இல்லே!
‘நிலவிலே விழுந்தி ருக்கும்
அழுக்’கென்று சொல்லிக் கொண்டாய்
உலவுங்காற் றாடியே கேள்:
‘உலகமே இருட்டின் கூளம்!’


அனலுக்கு நீலக் கும்பிப்
புகையுண்டே! படிகம் போன்ற
புனலுக்கு நுரையில் லாமற்
போனதா? புல்லி தழின்
தனதின்றி வாழ்ந்திருக்கும்
மலர்உண்டா? கபிலச் சாந்தில்
நனைகின்ற விழிக்கு, கோடி
நொடிப்புகள் பார்த்த தில்லை!


சன்னமாய் எனக்கு வந்த
தகவலால், வீணைக் காடே!
என்னென்ன விதமோ உன்னை
இகழ்ந்திட்டேன். இருட் டிருந்தால்
உன்னதம் வருமா நெஞ்சில்?
உன் கடி தாசி கண்டு,
தின் பண்டம் ஆனேன். என்னைத்
திருடிக்கொள்! நடத்து லோகம்!


‘தேன்கூரை’ என்று தானே
சொன்னேன் நான்; முகஞ் சுளித்து;

2