பக்கம்:சாவின் முத்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பிரேத ராஜ்யம்

கொல்லப்புறத்தில் கோதை:

வஞ்சிஎன்று வீட ழைக்கும்;
வையத்தின் இரத்தின வாய்,
அஞ்சுகமே என்றழைக்கும் போது-அவள்
அன்புரைகள் சந்திக்கத் தப்பாது!

தோகை மயில் சாயலிலே
சுந்தரம் எழுதி, விழி
போகும்வழியே நடையை இட்டு - கலையாப்
புதுமையை அழகினாலே தொட்டு

முல்லையிலே ஓர் அழைப்பு;
வண்டழுந்தும் தேன் உதட்டில்
நல்ல இசை, நூலிடையில் மின்னல்-திறந்து,
இமைக்கும் தேன் பாதிரிப்பூக் கன்னல்

கொல்லையிலே, தென்றல் விடும்
கூவலிலே, ஏடு விழும்
வெல்ல அந்தி நேரம்; நிழவின் ஈரம்-பார்த்து
வஞ்சி குளிர்ந்தாள் சிரிப்பின் ஒரம்.

தையலாருடன் தாயின் விளையாட்டு

தேய்ந்திருக்கும் மெய்யு டம்பில்
தெம்புவந்து ஒட்டுதல் போல்