இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
சாவின் முத்தம்
ஒரு பெண்:
"பூவிலே புரளு கின்ற
பொன்னு டலின் ஆதிக்கம்,
மாவேரைப் போன்றஇந்தப் பாயில்-
வந்தால்
மீளாது சாக்காட்டின் வாயில்!”
தாய்:
"இதைச் சொல்லு? அது அங்கே
இருக்கட்டும் என்ம களின்
சதைகரைந்து போனாலும் போகும் -
இது
திகைந்துவிட்டால் எல்லாமே ஆகும்!
விலையின் முனையை இழுத்து
விட்டுக் கொண்டிருக்க, வீட்டுத்
தலைமகளின் கொல்லை "நடை தாண்டல்' -
வந்து
சஞ்சரிக்கும் இருட்டுலகக் கூண்டில்!
அஞ்சுகத்திடம் அன்னையின் கொதிப்பு:
"சதங்கை இடும் கொழுஞ்சியடி
தண்டாமலே நடந்து வர
பதம்எங்கே போயிற்றடி உனக்கு? - மயிர்
பிளப்புதீமை இழைத்தாலும் எனக்கு!
போடிஅங்கே? அடுக் களையில்
போட்டது போட்டே கிடக்க,