பக்கம்:சாவின் முத்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சாவின் முத்தம்

பத்துப்பணம் வந்தால் இந்தப்
பாய் பிரியும்! 'தஞ்சையிலே'
முத்துமுத்தாய் எண்ணிவாங்கிக் கொண்
டேன் - இந்த
விட்டில் ஏதும் அதிகவிலை தண்டேன்."

மழைக்கூத்து:

வானதிர, தங்கத் திலே
வளரும்வரி மின் இறங்க,
தேன் கறக்கும் வாயிழையார் தங்கள் - வீடு
சென்றுவிட்டார்; எழுந்தது மங்கல்!

சிங்காரக் கடலின் தேமல்
இடுப்புபோல், முதிர் இருட்டுத்
தொங்குகின்ற மேகம்,குளிர் பிட்டு - மழை.
சித்தரித்துக் காட்டிற்று வாய்
தொட்டு!

தாயின் விருந்து:

"பப்பரிக்கும் இம்மழையில்
பயணம் வைத்தால் உன் உடம்பு
உப்புவிட்ட பாலைப்போலே ஆகும் - இங்கே
உறங்கிஎழுந் தால்மழையும் போகும்"

வயதிலே இளமை! கனி
வாய்க்கு நல்ல துணைதம்பி!
அயலில்தானே உந்தன் ஊரு என்ன? பெயர்
அளிப்பாயா எனக்குநீ முன்னே!"