இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாவின் முத்தம்
இமை நெறித்து வானத்தில்
அடுக்கி, கொஞ்சம்
இருள் கிடக்கும் பார்வையிலே
கோணம் வாங்கி,
சுமைக் குடத் துடன் நடந்து
மாந்தோப் போரம்
சென்றிட்டாள் நீலவள்ளி !
வாய் இமைத்து,
“நமை விட்டுப் பிரியாத
அந்தி நேரம்;
நல்ல இசை; பனித்தென்றல்,
இருந்தும், காதல்
குமையாத நெஞ்சத் தான்,
“அத்தான்” இன்னும்
கொத்திட ஏன் வரவில்லை?”
எனத் துடித்து,
நடை யழுங்க நின்றிட்டாள்.
மீண்டும் யாழை
நடத்துகின்ற வாய்திருத்தி
‘ஆமாம்’ சேரர்
படைத்தலைவன் என் அத்தான்!
சிரிப்பின் ஆழம்
பார்ப்பதற்கு இது நேரம்
அல்ல! நேற்று