பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அரைமணி நேர அறுவை


"சரி, பார்க்கலாம்."

'நீராருங் கடலுடுத்து' - விழா துவங்கியது. நாலைந்து பேர் பேசினார்கள். இதற்குள் நிகழ்ச்சி நிரலைப் பார்வையிட்ட அமைச்சர், நேர்முக உதவியாளரிடம் ஏதோ சொல்ல, அவர் அலுவலரின் கண்ணில் படும்படியாக முதல் வரிசை நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த பப்ளிசிட்டியிடம் வந்தார்:

"பப்ளிசிட்டி ஸார்! அமைச்சருக்கு ஒங்க பேச்சுன்னா ரொம்ப பிடிக்கும்."

"ஹி... ஹி... வசிஷ்டர் வாயால பிரம்மரிஷின்னு சொல்ற மாதிரி இருக்கு."

“என்னை நீங்க வசிஷ்டர்னு சொன்னதுல சந்தோஷம். இருந்தாலும் இன்னைக்கு ஒங்க சொற்பொழிவைக் கேட்கிற அதிர்ஷ்டம் அமைச்சருக்கு இல்லை. ஏன்னா. அவரு அவசர அவசரமா டில்லில ஒரு கான்பரன்ஸுக்கு பிளேன்ல என்கூட வரார். அதனால ஓங்க பேச்சை மூணு நிமிஷத்துல முடிக்கச் சொன்னார். இன்னொரு விழா இருக்கு பாருங்க..."

நேர்முக உதவியாளர் போய் விட்டார். விழாத் தலைவரான கலெக்டர் "பப்ளிசிட்டி அதிகாரி திரிசங்கு ஐந்து நிமிடம் பேசுவார்" என்று கறாராக அறிவித்துவிட்டு அமர்ந்தார்.

பப்ளிசிட்டி அதிகாரி திரிசங்கு மேடைக்கு வந்தார். அமைச்சருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு "மாண்பு என்ற வார்த்தைக்கு மாண்பு கொடுத்த மாண்புமிகு அமைச்சர் அவர்களே! திருக்குறளில் ஆட்சியதிகாரத்தில் சொன்னபடி ஆட்சி செலுத்தும் ஆட்சித் தலைவர் அவர்களே! அன்றும்... இன்றும்... என்றும்... மக்களின் இதயபீடத்தில் அமர்ந்திருக்கும் முன்னாள் சேர்மன் முனிரத்தினம் அவர்களே...! என்று இழுத்தபோது, "சட்டுபுட்டுனு ஒட்டு மொத்தமா சொல்லி முடிங்க!" என்றார் கலெக்டர்.

பப்ளிசிட்டி ஒட்டுமொத்தமாகப் பேசவில்லை. மேடையில் இருந்த அத்தனைபேரையும் அடைமொழி கொடுத்து விழித்தார். பொதுமக்கள்