சித்தர்கள் பூசாவிதிகள் 69
எண்ணவே ருத்திரியே மாயோன் பாரி
என்தாயே மயேசுபரியே மனோமணியே உண்ணவே லட்சுமியாம் தேவியம்மாள்
உரிமையுடன்துளபமதில் இருந்ததேவி எண்ணவே வேணுமடா சிந்தை தன்னில்
இதமாக அவளிடத்திற் செலுத்தவேனும் கண்ணவே நவரத்தின முடிகிரிடம்
காதில் குண்டலம் அணிந்து மஞ்சம் மேலே. (21) மஞ்சத்தில் அரனிருக்கும் மஞ்சத்தின்கீழ்
மகத்தான் தேவரொடு முனிவர் சூழத் தஞ்சத்தில் அரன்மடியில் இருந்த தாயே
சச்சிதான்ாதியருள் பெற்ற தாயே கஞ்சத்தில் உமைமாதே ரணியே தேவி
கருணைபெருஞ் சச்சிதான்ந்தத் தாயே துஞ்சத்தில் ஆதார சத்தியென்றும்
சுருக்கமாக ஒருமனதாய்க் கூவு கூவே. (23) . சுருக்காகக் கூவியபின் சொல்லக் கேளு
சுகமான தேன்நெய்சக் கரையினோடு மருக்காகக் கருப்பஞ்சாறுமாம்பழத்தினோடு
மைந்தனேவத்துஅரைப் படியும் விட்டு பருக்காகப் பொரிக்காரச் சுண்ணம் போடு
'பசுவின்பால் புழுகுடனே பூரஞ் சேர்த்து உருக்காகத் தற்சனையிற் தோய்த்துக்கொண்டு.
உத்தமனே திரிகோணத்து உரைக்கச் செய்யே. (33)