பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவேதுணை - தேரையர் திருவாய் மலர்ந்தருளிய

சிவ பூசா விதி

அருவாகி உருவாகிஅகிலமாகி - ஆதிமூலமதாகி அங்கு இங்காகித் திருவாகிச்சுடர்மனியின் ஒளிவதாகித்

திகழ்கின்ற ஜம்பூதத் தோற்றமாக்கிக்

கருவாகி வித்தாகிவத்துமாகிக்

களங்கமில்லா தொளிர்கின்ற தீபமாகிக்

குருவாகி மெய்ஞ்ஞானப் போதனாகிக்

குலவுகின்ற சோதிபதங்காப்பதாமே.

ஆமப்பாமாயைபொய் கோபந்தள்ளு

அறிவில்லாமாந்தருடன் கூடிடாதே தாமப்பாஞானபூரணத்தைக் கண்டு

தற்பரையைப் பூசித்துப்பானஞ்செய்து வாமப்பாஆறுவரை யூதிசென்று

வளமான பொருளறிந்தே அதனிற் கூடு நாமப்பா மூன்றெழுத்தின் குறியைக் கேளு

நங்கென்னவாசியுள்அங்கும்பாரே.