தேரையர்சிவபூசாவிதி 100
காணுமடாசிதம்பரர்க்கு வில்வத்தாலே
காணவே ஆயிரத்து எட்டும் ஈயத் தோணுமடா யோகம் அட் டாங்கந் தோன்றும்
துரிதத்தில் ஆத்தாள்தான்் தெரிசிப்பாள் காண். பூணுமடா உன்மனத்தை அதிலே ஊணு புகழான மோகனமும் வசியமாகும் நானுமட7 புத்திரனுஞ் சம்பத்தாகும்
நலமாக லோகமெல்லாம் நாட்டமாமே. 39 நாட்டமாம் இங்குகிதம் பரந்தான்் கோடி
நலமான வாலையடா கோடி பண்ணு வாட்டமாம் வாலைக்கு வாலை பீசம்
வகையான சிதம்பரர்க்குச் சிவ பீசந்தான்் ஒட்டமாம் உருப்போட்டுக் கணக்கை எண்ணு
உத்தமனே கேட்டதெல்லாம் ஈவார் பாரு ஆட்டமாம் ஆகாய சித்தர் வந்து
அப்பனே குளிகையது ஈவார் பாரே. 40 பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்குப்
பரிவாக நித்திரைதான்் வேண்டாம் அப்பா நேரப்பாஇரவில்நித் தரைதான்் பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துவேன்கேள் வாரப்பா வரிசையாய்க் கால்தான்் நீட்டி
வகையாக நித்திரைதான்் பண்ண வேண்டாம் ஒரப்பா ஒருபக்கமாகச் சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே. 41