சித்தர்கள் பூசாவிதிகள் 119
பாடியே அகாரத்தில் உகாரம் இட்டுப்
பண்பான ஓங்காரங் கொண்டு கட்டி
நாடியே அதன்கிழே மகாரம் இட்டு
நலமாக அதின்மேலோங்காரந்தான்்
கூடியே அரியெழுத்து மேலே தூக்கிக்
குணமாகச் சூலமிட்டு பூர்மம் நாட்டு
ஆடியே சிங்குவங்கு என்று நாட்டு
அடைவாயே காட்சரத்தைப்பதித்துப் போடே 27
போடுசிந்தாமணிக்குச்சிகாரமிட்டு
பொங்கமுடன் மகாரமொடு யகாரம்போடு ஆடவே அகாரமுடன் விந்தை போட்டு
அடைவாஞ்சக்கரத்தில்திரு வாசி சூட்டுக் கூடச்சிந்தாமணிக்குப் பிசம் ஆச்சு - குணமான சக்கரத்திற் பதித்துப் போடு நாடியே போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே. 22
பாடியே வலப்புருவம் அகாரம் போடு
பண்பான இடப்புருவம் ஆகாரந்தான்் நாடியே வலக்கண்ணு இகாரம் போடு
நலமான இடக்கண்ணு ஈகாரந்தான்் சாடியே வலக்காது உகாரம் போடு
சமத்தான் இக்காது ஊகாரந்தான்் வாடியே வலக்கன்னம் இரோம்நீ போடு
வடிவான இடக்கன்னம் ஈரோம் நாட்டே 23