இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புலிப்பாணி முனிவர்பூசாவிதி 130
ஆச்சப்பாமிச்சமதாய் நின்ற மிச்சம்
அண்டமென்ற சுழினையிலே நின்று பார்த்தேன்
காச்சப்பா கம்பநுனி மிச்சம் பார்த்தால்
கம்பதுணி கற்பூரதீபம்போலே
பேச்சப்பா பேசாத சோதியாக்சு
பிரணவமாய் நின்றதொரு சோதித் தாயே
மூச்சப்பா நிறைந்ததிரு வாசியாலே
முனைகண்டு கம்பமதில் ஏறினேனே. 57
ஏறினேன்.கவுதகிரி வட்டமேறி
ஏகாந்த வெளியொளியைப் பார்த்து மைந்தா
மீறினேன் அகாரமதிற் செயல்தன்னாலே
மின்னொளியின் அமுர்தரச பானங் கொண்டு
தேறினேன்சாகாத கால்மேல் நின்று
தெளிந்துகொண்டு போகாதபுணலைக்கண்டு
ஆறினேன் வேகாத தலையைக் கொண்டு
அடங்கினேன்.அப்பொழுது அடங்கினேனே. 53