சித்தர்கள் பூசாவிதிகள் 47
ஆமப்பாஇன்னமொரு கருவைக் கேளு
ஆதியென்ற எட்டெழுத்தின் அருமைதன்னைத் தாமப்பாதன்னிலையில் மனக்கண் வைத்துத்
தயவாக மூன்றெழுத்தைத் தியானம் பண்ணி ஒமப்பாபிணியாளர் வந்து நின்றால் - -
உத்தமனே பூரித்து உண்மையாக நாமப்பாவிபூதியைநீகடாட்சித்தக்கால்
நாடிநின்ற பிணிகள் எல்லாம் நசித்துப்போகும் 38
போகுமடாபொல்லாத நோய்களெல்லாம் - புத்தியுடன் பூரணமாய் இருந்துகொண்டால் ஆகுமடாநவக்கிரகஞ் சித்தியாகும் -
ஆதியென்ற மூலமதில் வாசிபூட்டி வாகுடனே புருவமதில் மலர்க்கண் சாத்தி
வரிசையுடன் ஓம்கிலியும் சவ்வென்றோத ஏகுமடாபில்லிமுதல் விடங்களெல்லாம்
ஏகாந்த நடுவணையில் இருந்து பாரே. .39
பாரப்பாசித்துவகை திலதம் சொல்வேன்
பார்தனிலே மானிடர்க்குப் பகர வேண்டாம் தேரப்பா மனதறிவால் தெளிந்து கொண்டு
சிந்தைமனது ஒன்றாகத்திரமாய் நின்று நேரப்பாநின்றதொரு சல்லி மூலம் -
நிசமான மூலமதை பார்தான்் காண்பார்? பேரப்பா பேசாத மூலந்தன்னைப்
பெருமையுள்ள மவுனமதாய்ச்சொல்லக்கேளே.40