பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இல்லறம்

இல்லறத்தில் வாழ்கின்ற கணவனும் மனைவியும். மகப்பேறு பெற்று மகிழ்வதே பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள். மகப்பேறு பெறுவதற்கு கரு தரித்தல் என்பது இயல்பான ஒன்றாகும். அங்ஙனம் கருத்தரிப்பதற்கு - ஆடவன் தான் சேர்த்து வைத்திருக்கின்ற சக்தியினை மன மகிழ்ச்சியுடன் கொடுத்தால் தான் கரு தரிக்கும் என்பது உயரிய உண்மையாகும்.

ஞானவான்களாகிய குருமார்கள் சீடர்களுக்கு உடதேசம் அளிப்பது என்ற உண்மையினை சிறிதளவு, சிந்தித்துப் பார்த்தாலும் தவப் பயனே ஆகும் என்பது வெள்ளிடை மலையாகும்.

மூன்று தீமைகள்

மனிதர்கட்கு, இருக்கின்ற தீமையான குணங்களை 'மலங்கள்' என்று கூறுவார்கள். இந்த மலங்களை ஆணவம்---கன்மம்--மாயை என்று மூன்று பெயர்களினால் அழைப்பார்கள். இந்த மூன்று மலங்களும் அற்றுவிட்டால் தூய்மையான உள்ளம் இறைவன் காட்சிக்கு உன்ன தமாக பக்குவப்படுத்தப்பட்டுவிட்டது என்பது பொருளாகும்.

மலங்களைப் போக்குவது குருமார்களின் உபதேசமும் தியானப் பயிற்சியுமே என்று நம்முடைய மறைகள் பறை, சாற்றுகின்றன.

பல பிறவிகளில் செய்து வருகின்ற தியானப் பயிற்சிகளால் மூன்று மலங்களும் ஒவ்வொன்றாக அற்றுப் போய் விடும். நினைத்து, உபதேசிப்பது என்பது ஒரு மலம் உடையவர்கட்கு என்றும், கண்களால் பார்த்து: உபதேசிப்பது என்பது இரண்டு மலங்கள் உடையவர்க்கு என்பதும், தொட்டு உபதேசிப்பது என்பது மூன்று. மலங்கள் உடையவர்க்கு என்றும் ஒருவகையில் வேதாந்த நூல்கள் விளக்குகின்றன.. .