இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்
L
- சொல்வதற்கு எதையுமே பெற்றிராதவனே மிக அதிகமாகப் பேசு பவனாவான். இலியோ தோல்கதாய்
- வெற்றுப் பேச்சைவிட, சோம்பலை ஊக்குவிப்பது வேறொன்று மில்லை. இலியோ தோல்கதாய்
- அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் முயற்சி தேவைப்படுகிறது என்ற போதும், அத்தகைய அனைத்து முயற்சிகளிலும், மிகவும் கடின மானது தனது நாவைக் கட்டுப்பருத்துவதேயாகும். அதுவே மிகவும் தேவையானதுமாகும். இலியோ தோல்கதாய்
- ஏதோ ஒன்றை சொல்லத் தவறியதற்காக ஒவ்வொரு முறையும் நீ வருந்தும்போதும், நீ பேசியதற்காக நூறு முறை வருந்த வேண்டி யிருக்கும் என்பதை நினைவில் கொள். இலியோ தோல்கதாய்
- ஒரு பேரறிவாளனின் நாக்கு அவனது நெஞ்சில் உள்ளபோது, ஒரு
முட்டாளின் நெஞ்சம் அவனது நாக்கில் உள்ளது.
என்.வி.செல்குனேவ் * கற்றறிந்து கொள்ளும் ஆவலைவிட, பேசும் ஆவல் எப்போதுமே மிகுதியானதாகவே இருக்கும். திமிட்ரி பிசரேவ்
- எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமுமின்றி தனது நண்பர் ம் கூட ஏதோ ஒன்றை விவரிப்பது என்பது,ஒரு செயல்பாடற்ற தற்பெருமை கொண்டவனின் திறமையாகும். திமிட்ரி பிசரேவ்
- தற்பெருமை என்னும் ஆற்றல் எப்போதுமே செயல்பாடற்ற மக்களிடையே ஆர்வத்தையும் வியப்பையும் எழுப்புவதாகும்.
நிகலாய் தோர்ரோலியோவ்
- சோம்பேறிகளே இந்த உலகில் மிக அதிகமாகப் பேசுபவர்களாக இருப்பவர்கள் ஆவர். பி.ஏ.பவலெண்கோ
230