116
கலி : டேய், சிரோ! போகாதே! இங்கேயே இரு
சிரோ : சரி, இருக்கிறேன், எசமான்!
கலி : நான் பாரிஸிலிருந்து திடீரென்று புறப்பட்டது உனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். அப்படித் திடீரென்று புறப்பட்டு வந்தவன் இங்குவந்து ஒரு மாத காலமாக எதுவும் செய்யாமல் இருப்பதைக் கண்டு நீ இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா?
சிரோ : உண்மைதான்! எசமான்!
கலி : இதன் காரணத்தை நான் முன்னமேயே உன்னிடம் சொல்லவில்லை என்றால், அது நான் உன்மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்பதால் அல்ல. எதையும் தேவையானால் ஒழிய யாரிடமும் சொல்லாமல் இருப்பது தான் இரகசியத்தைக் காப்பாற்றச் சிறந்த வழி என்பது என் கருத்து. ஆனால், இப்போது உன் உதவி எனக்குத் தேவைப்படுகிறபடியால் எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லப்போகிறேன்.
சிரோ : நான் உங்கள் வேலைக்காரன் தானே! வேலைக்காரர்கள் தங்கள் முதலாளிகளின் காரியங்களில் தலையிடக் கூடாது. ஆனால், அவர்கள் அதில் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டால், அவர்கள் உண்மையாக வேலை செய்யவேண்டும். நான் அவ்வாறுதான் இதுவரை நடந்திருக்கிறேன். இனிமேலும் நடப்பேன்.
கலி : எனக்குப் பத்து வயதாகும்போது என் பெற்றோர் இறந்து போனதும், அதன்பின் நான் பாரிசுக்குப் போய் இருபது ஆண்டுகள் அங்கேயே நிரந்தரமாக இருந்து வருவதும், இந்த் வீ ட்டைத் தவிர வேறு எல்ல்ாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமைதியாகக் காலங்கழித்து வந்ததும் உனக்குத் தெரிந்தது தான்!
சிரோ : ஆம் நன்றாகத் தெரியும்.
கலி : ஆனால், நான் இன்பமாயிருப்பது காலத்திற்குப் பொறுக்கவில்லை. அது, நண்பன் காமிலோ கல்பூசியைப் பாரிஸ் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தது.
சிரோ : புரிகிறது! உங்கள் கவலைக்குக் காரணம் என்னவென்பது இப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பிக்கிறது: