பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பிறந்திருக்காது. இன்னும் எத்தனையோ இளவரசிகளின் கதியும் அப்படித்தான் ஆகியிருக்கும்!

நிக்கியா : ஆ!

கலி : மந்திர கோலா மருந்து தயாரிப்புக்கு வேண்டிய எல்லாம் நான் கொண்டு வந்திருக்கிறேன். எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது நீர் வாங்கிக் கொள்ளலாம்.

நிக்கியா : எப்பொழுது கொடுத்தால் நல்லது?

கலி : இன்று இரவு சாப்பாட்டுக்குப் பின்னால், சந்திரனும் சாதகமான நிலையில் இருக்கிறது. இதைக் காட்டிலும் நல்ல நேரம் வாய்ப்பதரிது!

நிக்கியா : அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் மருந்தைத் தயாரித்துக் கொடுங்கள். என் சம்சாரம் அதைக் குடிக்கும்படி நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கலி : ஆனால், இந்த விஷயத்தில் ஒரு பெரிய கஷ்டம் இருக்கிறது. இந்த மருந்தை அவள் உட்கொண்ட பிறகு, முதன் முதலாக அவளோடு மகிழ்ந்திருக்கிற மனிதன் எட்டு நாட்களுக்குள் இறந்து போய்டுவான். அவனைக் காப்பாற்ற இந்த உலகத்தில் எந்த மார்க்கமுமேயில்லை.

நிக்கியா : மரணம், நரகம் சே! அந்த மோசமான மருந்தை நான் தொடவேமாட்டேன்! என்னிடம் விளையாட வேண்டாம். என் கோபத்தைக் கிளற வேண்டாம்.

கலி : கொஞ்சம் பொறுங்கள். அதற்கும் ஒரு மாற்று வழி இருக்கிறது. நிக்கியா : என்ன அது?

கலி : மந்திர கோலா மருந்தை அவள் உட்கொண்டவுடனே, வேறொருவனை அவளுடன் இருக்கும்படி செய்கிறது. அந்த மருந்தின் விஷ நீர் முழுவதும் அவன் உட்லில் இறங்கிவிடும். பிற்கு நீங்கள் எவ்விதமான ஆபத்துமின்றி வழக்கம்போல் உரிமை கொண்டாடலாம்.

நிக்கியா : முடியாது என்னால் முடியாது!

கலி : ஏன் முடியாது?