பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


நிக்கியா : பிரான்சு தேசத்து மகாராஜாவே அப்படிச் செய்திருக்கிறார் என்னும்போது நாம் செய்தால் என்ன? ஆனால், விஷயம் வெளிக்குத் தெரியக் கூடாது.

கலி : அது ஏன் தெரியப்போகிறது?

நிக்கியா : இதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறதே! அது பெரிய கஷ்டமாச்சே!

கலி : என்ன அது!

நிக்கியா : என் மனைவியை எப்படிச் சம்மதிக்கச் செய்வது! அவள் இந்த மாதிரிக் காரியத்துக்கு ஒப்புக் கொள்ளவேமாட்டாளே!

கலி : நானாயிருந்தால், நான் சொல்லுகிறதை என் மனைவி கேட்கவில்லையென்றால் அவளுக்குக் கணவன் என்று சொல்லிக் கொள்ளவேமாட்டேன்.

லிகுரியோ : எனக்கொரு யோசனை தோன்றுகிறது.

நிக்கியா : என்ன?

லிகு : அவளுடைய மத குருவைக் கொண்டு அவளைச் சம்மதிக்கச் செய்யலாம்.

கலி : அவரை யார் சரிப்படுத்துவது?

லிகு : நீர், நான், பணம் எல்லாமாகச் சேர்ந்து தான்!

நிக்கியா : என்ன, இருந்தாலும் விஷயத்தைச் சொன்னால், என் உத்தமமனைவி அந்த மதகுருவைப் போய்ப்பார்க்கக் கூட வரமாட்டாள்.

லிகு : அதற்கொரு வழியிருக்கிறது.

கலி : என்ன?

லிகு : அவள் தாயாரைக் கொண்டு, அவளை மதகுருவிடம் அழைத்துச் செல்லும்படி வைக்கலாம்.

நிக்கியா : அது சரியான யோசனை. என் சம்சாரத்திற்கு தன் தாயிடம் நல்ல நம்பிக்கை உண்டு.

லிகு : சரி, இந்தத் திட்டப்படியே எல்லாம் செய்வோம்!