பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


சோஸ்ட்ராட்டா : மகளே! இனியும் அசட்டுத்தனமாக மறுக்காதே!

லுக்கிரிசியா : சரி, உங்கள் ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பொழுது விடிவதற்குள் நான் செத்துப் போய் விடுவேன் என்று தான் தோன்றுகிறது.

டிமோஷியோ : அஞ்சாதே குழந்தாய்! உனக்காக நான் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பேன்.

சோஸ்ட்ராட்டா : குருதேவரே! தங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்!

லுக்கிரிசியா: ஆண்டவனும் அன்னை மேரியும்தான் இனி என்னைக் காக்க வேண்டும்.

(அவர்கள் போகிறார்கள்)
காட்சி : 4

கலிமாக்கோ : என்ன செய்தார்களோ? என்ன நடந்ததோ? இப்பொழுதே மணி பதினொன்றாகியிருக்கும் போலிருக்கிறதே ஆ! அதோ தரகன் லிகுரியோ வருகிறான்.! எவ்வளவு அவசரமாக வருகிறான்! அவன் சொல்லப் போகும் செய்தி என்னை இன்னும் சில நாட்கள் வாழ வைத்தாலும் வைக்கலாம். அல்லது உடனடியாகச் சாகச் செய்தாலும் செய்யலாம்.

(லிகுரியோ வருகிறான்)

கலி : லிகுரியோ! லிகுரியோ! என்ன செய்தி?

லிகு : நல்ல செய்தி!

கலி : உண்மையாகவா?

லிகு : ஆம்!

கலி : பத்தினி லுக்கிரிசியா ஒப்புக்கொண்டுவிட்டாளா?

லிகு : ஆம்!