பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


லிகு : . ஏனய்யா! நீரே அந்த மடப்பயலாயிருந்து விட்டுப் போயேன்!

கலி : அதெப்படி முடியும், நான் உங்களோடு கூட இருக்க வேண்டுமே?

லிகு : அதற்கும் அந்த மதகுருவையே பிடிக்கிறேன்.

கலி : பிடித்து...?

லிகு : எல்லோரும் மாறு வேடம் போட்டுக் கொள்வோம். மதகுருவும் அப்படியே மாறுவேடத்தோடு வரச் செய்கிறேன். அவர்தான் நீர் என்று மெசர் நிக்கியா பிரபுவிடம் கூறுகிறேன். நீர் கிழிந்த ஆடைகளோடு ஒரு மடப் பயலைப்போல் தெரு வழியாக வாரும். உம்மைப் பிடித்துப் போகிறோம்.

கலி : முகத்தை மூடிக்கொண்டுதானே.

லிகு : சேசே! அது சந்தேகத்தை உண்டாக்கும்.

கலி : முகம் திறந்திருந்தால், அந்த நிக்கியா நான்தான் என்று தெரிந்து கொள்வானே!

லிகு : முகத்தைக் கோணலாக வைத்துக் கொள்ளும். வாயை அகலத் திறந்து, உதட்டை விரித்து வைத்துக் கொள்ளும். அல்லது பல்லெல்லாம் தெரியக் காட்டும். ஒரு கண்ணை எப்போதும் மூடிக்கொண்டேயிரும். எங்கே செய்து காண்பியும் பார்க்கலாம்.

கலி : (முகத்தைக் கோணல் செய்து) இப்படியா?

லிகு : இல்லை.

கலி : இன்னும் கோணலாக்கி இது மாதிரியா?

லிகு : இன்னும் சரியாக வரவில்லை.

கலி : சரி, இப்போ பார்.

லிகு : ஆம் இதே மாதிரிதான்; மறந்து விடாதீரய்யா! என்னிடம் வீட்டில் பொய் மூக்கு ஒன்று இருக்கிறது. அதைத் தருகிறேன். ஒட்டிக்கொள்ளும்.