147
மூன்றாம் பகுதி
1. மாக்கியவெல்லியின்
மணி மொழிகள்
அறநெறி
வாழ்ந்தவர்களைக் கொல்லுவதும், உற்ற நண்பர்களுக்குத் துரோகம் புரிவதும், நேர்மையில்லாமல் நடப்பதும், இரக்கமில்லாமல் இருப்பதும், மதாபிமானமற்ற செயலும் அறநெறியென்று சொல்லப்பட மாட்டாது. இந்த வழிகளால் ஒருவன் அதிகார பதவி அடையலாம். ஆனால் புகழ் அடைய முடியாது.
அறிவு
உலகத்தில் மூன்று விதமான மூளைகள் இருக்கின்றன. ஒன்று, பிறர் உதவியில்லாமல், தானாகவே எதையும் அறியக் கூடியது. இது நல்ல மூளை, இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய பிறகு அறியக்கூடியது. இதுவும் நல்ல மூளைதான். ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது.
அதிகாரம்
அதிகாரம் வெகு சுலபமாகத் தனக்கொரு பெயரைச் சூட்டிக் கொள்ள் முடியும். ஆனால் வெறும் பெயர் தனக்கோர் அதிகார சக்தியை அடைய முடியாது.
அதிகாரத்தை அடைபவர்கள் அதை மேன்