பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மேலும் அதிகரித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் என்பது ஒரு பெண். அவளைப் பலவந்தமாகத் தான் அடையவேண்டும்!

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான்!

அமைச்சர்

நாடாளும் அரசனின் நலத்தைவிட தன்னலத்தையே அதிகமாகக் கவனிக்கிறவன் சரியான அமைச்சனாக மாட்டான்.

நாடாளும் புரவலன் தன் அமைச்சர்களுக்குப் பெருமையும் செல்வமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேறொன்றின் மீது ஆசை வைக்க மாட்டார்கள்.

அரசியலமைப்பு

குடியரசு, மேன் மக்களாட்சி, முடியாட்சி ஆகிய இம்மூன்று வகைக்கும் இடமளித்து உருவான அரசியலமைப்பைப் பெற்ற அரசு நிலைத்து நிற்கும்.

அரசியல்

நல்லதோர் அரசியல் அமைப்பைப் பெற்றிறாத குடியரசு நல்லின்பத்தோடு வாழ முடியாது.

அரசியல் கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை, அவற்றை நிறைவேற்றுவதற்காகப் பின்பற்றிய செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல், அவற்றின் மூலம் அடைந்த பலா பலன்களைக் கொண்டுதான் திர்மானிக்கவேண்டும்.

எல்லா இராஜ்யங்களின் அடிப்படை அஸ்திவாரம், நல்ல சட்டங்களிலும் நற்படைகளிலுந்தான் அமைந்திருக்கிறது. ஆளும் பதவியை அடையும் ஒருவனுக்கு, அவனால் தாக்கப்பட்டவர்களும் எதிரிகளாகிறார்கள். அவனுக்கு உதவியாய் இருந்தவர்களும், அவர்களுடைய ஆசைய பிலாஷைகளை அவன் நிறைவேற்ற முடியாமல் போவதால் எதிரிகளாகிறார்கள்.

மக்களின் அன்பைப் பெற்றுள்ள ஆட்சியாளன் எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

எதிர்ப்பிலே வளர்ந்தோங்கும் அரசன் பேரரசனாகிறான்.