பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

பெரும்பாலானவர்கள் எதையும் கண்களால் பார்த்தே மதிப்பிடுகிறார்கள். சிலர் தம் கையினால் தொட்டுப்பார்த்து உண்மையான மதிப்பை உணர்கிறார்கள்.

முகஸ்துதி

முகஸ்துதி செய்பவர்களை நம்பவே கூடாது.

முகஸ்துதி மனிதரை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.

மொழிவழி அரசியல்

மொழியிலும், நீதி முறையிலும், பழக்க வழக்கங்களிலும் மாறுபட்ட பல பகுதிகளை ஒன்று சேர்த்துக் கட்டியாளுவது மிக கடினம்.

ஒரே மொழிபேசும் ஒரே இனமக்கள் வாழும் பல இராஜ்யங்களை ஒன்று சேர்த்து ஆளுவது சுலபம். அதிலும் அவர்கள் சுதந்திரமாக இருந்து பழக்கப் படாதவர்களாயிருந்தால் இன்னும் சுலபம்.


யுத்தம்

யுத்தம் என்பது எந்த மனிதனும் அதன் மூலம் கண்யமாக வாழமுடியாத ஒரு தொழிலேயாகும். அந்த வேலையின் மூலம், ஏதாவது இலாபத்தை அறுவடை செய்கிற போர்வீரன், பொய்மையும், வெறியும், கொடுமையும், உடையவனாக விளங்கவே கடமைப் பட்டிருக்கிறான்.

எவன் யுத்தம் உண்டாக்குவதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறானோ, அவன் பாபி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. - யுத்தம், திருடர்களை உண்டாக்குகிறது. சமாதானம் அவர்களைத் தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறது.

வதந்தி

குற்றஞ் சாட்டக்கூடிய வழிவகைகள் இல்லாத இட்ங்களில் தான் வதந்தியைப் பரப்பும் முறை பெரிதும் கையாளப்படுகிறது.

விதி

மனித விவகாரங்களின் போக்கைச் சிந்தித்துப் பார்த்தால், பல விஷயங்கள் கிளம்புவதையும், அவற்றை