பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

காஸ்ட்ரூசியோட வாழ்க்கை (1520):

காஸ்ட்ரூசியோ என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாக்கியவெல்லி எழுதிய நூலாகும்.

போர்க்கலை:

போர் செய்யும் முறைகளைப் பற்றி மாக்கியவெல்லி ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான், போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும், கொள்கைகளையும் விளக்கிக் கூறுகிறான்.

பிளாரென்ஸ் சரித்திரம் (1520) :

1518-ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த மெடிசி பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மாக்கியவெல்லியின் வறுமை நிலை கண்டு, இரக்கப்பட்டு அவனை அழைத்து பிளாரென்ஸ் சரித்திரத்தை எழுதும்படி நியமித்தனர். இதற்காக அவனுக்கு வருடாந்தரச் சம்பளமாக ஒரு சிறு தொகை கொடுக்கப்பட்டது. தர்க்கமுறையாகத் தொடர்ந்து ஏற்படும் மக்கள் வாழ்க்கையின் மாறுபாடுகளைப் பற்றிய இதுபோன்ற சரித்திரக் குறிப்பு எழுதும் முறை வேறு எந்த மொழியிலும் செய்யப்படாத முதல் முயற்சியாகும். ஆனால் மாக்கியவெல்லி இந்நூலை முற்றுப்பெற முடிப்பதற்கு முன்னால் அவனுடைய உயிர் வாழ்க்கை முடிந்துவிட்டது.

மன்ட்ர கோலா (1524):

முதன் முதலில் மாக்கியவெல்லி கவிதைகளும் இன்பியல் நாடகங்களும் எழுதினான். அவன் இயற்றிய செய்யுள்கள் மோசமானவை! ஆனால். இதயத்தைத் தொடக் கூடியவை. அவன் தனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த அரசன் நூலைக் காட்டிலும் தன் செய்யுள் நூல்களையும் இன்பியல் நாடகங்களையுமே பெரிதும் விரும்பினான். அவையே தன் அரிய படைப்புக்கள் என்று கருதினான். மன்ட்ரகோலா என்ற இந்த இன்பியல் நாடகம் தனக்கேயுரிய தனி நடையுடையது. எவ்வகையிலும் இதைச் சிறந்த நூல் என்றே கூற வேண்டும்.