பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இல்லாவிட்டால் பயப்பட வேண்டியதில்லை. யாராவது ஒருவர்பக்கம் சேர்ந்து தானும் போரில் இறங்க வேண்டும். அவ்வாறு இறங்காவிட்டால், வெற்றி பெற்றவனுக்குத்தான் இரையாக நேரிடும். அந்தச் சமயத்தில் தனக்கு உதவி செய்ய ஆளில்லாது திண்டாட வேண்டி நேரிடும். ஏனெனில் நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ, தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.

நட்பாக இல்லாத ஒருவன் தான் இந்த அரசன் நடுநிலை வகிக்க வேண்டுமென்று விரும்புவான். நட்புடைய அரசனோ, தனக்கு உதவியாக இவன் படையெடுத்து வர வேண்டுமென்றுதான் விரும்புவான். இது உலகத்தியற்கை ஒருமனம் இல்லாத அரசர்கள்தாம். ஆபத்திலிருந்து விலகி நிற்கவேண்டுமென்ற எண்ணத்துடன் நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பார்கள். பெரும்பாலும் அதனால் அழிவையே காண்பார்கள். ஆனால், பொருதுகின்ற இருவரில் ஒருவர் பக்கம், வெளிப்படையாகச் சேர்ந்து கொள்ளும் பொழுது, அப்படித்தான் சேர்ந்த பக்கந்தான் வெற்றி பெற்றாலும், அவன் தன்னைக்காட்டிலும் வல்லமை மிகுந்தவனாயிருந்தாலும், தான் அவனைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், அவன் தனக்குக் கடமைப்பட்டவனாக இருப்பான்; நட்பும் உறுதிப்படும். ஆனால், தான் சேர்ந்து கொண்ட பக்கந்தான் தோல்வியுற்றாலும் கூட, அவன் அவனால் முடிந்த வரையிலும் தனக்கு உதவி செய்வதையும் தன்னைக் காப்பாற்றுவதையும் கடமையாகக் கொண்டு செயலாற்றுவதைக் காணலாம். மீண்டும் ஒருவனுடைய கூட்டுறவினால் உயர்வதற்கு முடியும்: வழியுண்டு. இந்த விஷயத்தில் வெற்றி பெற்றவனுக்கு அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் தான் அழிவை அடையும்போது தன்னுடன் இன்னொருவன் துணையோடேயே ஆழிவதால், அவன் தன்னைக் காப்பாற்றக் கடமைப்பட்டவனாகிறான். பெரும்பாலும், உதவியைப் பெற்றவன் வெற்றி பெறாமற் போகமாட்டான்.

இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். தன்னைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ளவன் ஒருவன் மற்றொருவனை அடித்து வீழ்த்துவதற்குத் தான் துணை போகவே கூடாது: இன்றியமையாத தேவையிருந்தாலொழிய!