இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூல் சுருக்கம் : 2
டிட்டஸ் லீவியசின் முதல் பத்துப்
புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி
(Discourses On The First Ten Books Of Titus Livius)
பழங்காலத்து அற்புதச் சிற்பங்களைக் காணும்போது அவற்றைப் பெரிதும் போற்றி நம் வீடுகளில் அலங்காரமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். அந்தச் சிற்பங்களைப் பெறவோ, அவை போல் உருவாக்கவோ நாம் அவற்றை வைத்திருப்போருக்கோ, செய்வோருக்கோ பெரும் விலை கொடுக்கிறோம். ஆனால், தங்கள் தங்கள் நாட்டுக்காகத் தங்களையே தியாகம் செய்த பழங்காலத்து மன்னர்களைப் பற்றியும், படைத் தலைவர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சரித்திரத்தில் படிக்கும்போது, அவர்களின் ஞானத்தையும் அறநெறியையும் கண்டு ஆச்சரியப்படுகிறோமே தவிர அவற்றைப் பின்பற்ற எண்ணுவதில்லை. பழைய அறநெறியின் அடையாளமே இல்லாதபடிக்கு நாம் அதைப் புறக்கணித்து வருவதைக் கண்டு வருந்தாமலிருக்க முடியவில்லை.