பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

நகரங்களை நிர்மாணிப்பவர்கள் மோசசைப் போல் தாங்கள் வசப்படுத்திய நகர்களில் குடியேறுவதுமுண்டு; ஏனியசைப் போல் புதிய நகரங்களைக் கட்டுவதுமுண்டு. செழிப்பற்ற நிலத்தில் தங்கள் நகரங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள், சோம்பலற்றுச் சுறுசுறுப்பாகவும், ஒற்றுமையாகவும், வறுமையைத் தவிர்க்கப் போராடும் தன்மையும் உடையவர்களாகி விடுகிறார்கள். வளமான நாட்டில் வாழ்பவர்களின் சோம்பலைக் குறைத்து உழைப்பைப் பெருக்குவதற்குச் சட்டங்கள் தாம் கட்டாயப்படுத்த வேண்டும்.

அலெக்ஸாண்டர் தன் வெற்றிச் சின்னமாக ஒரு நகரை நிர்மாணிக்க முற்பட்ட பொழுது, அவனுடைய சிற்பி டினோக்கிரேட்ஸ் என்பவன் ஆதோஸ் மலையின் மீது பலம் பொருந்தியதாகவும் பார்ப்பவர்கள் வியந்து பாராட்டும் படியாக மனித உருவமுடையதாகவும் கட்டிக் கொடுப்பதாகக் கூறினான். அலெக்ஸாண்டர், டினோக்கிரேட்ஸை நோக்கி, “மக்கள் எதைக் கொண்டு வாழ்வார்கள்?” என்று கேட்டபோது சிற்பி விழித்தான். அதன் பிறகு தன் வெற்றிச் சின்னமான அலெக்ஸாண்டிரியா நகரை நைல் நதிக்கும் கடலுக்கும் அருகாமையில் உள்ள வளம் நிறைந்த பிரதேசத்தில் நிர்மாணித்தான்.

ரோமாபுரியை உண்டாக்கியவன் ஏனியஸ் என்றால் அது அன்னியரால் உண்டாக்கப்பட்டதாகிறது. ஆனால் ரோமுவஸ் தான் அதை உருவாக்கியவன் என்றால் தன் நாட்டவர்களாலேயே ஆக்கப்பட்டதாகிறது. எப்படியானாலும் ரோமாபுரி ஆரம்ப காலத்திலிருந்தே உரிமையும், சுதந்திரமும் உடையதாகவேயிருந்து வந்திருக்கிறது.

ரோமுலஸ், நூமா போன்றவர்களின் கடுமையான சட்டங்கள் அங்கு வாழ்ந்தவர்களை வீண். கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக்கிவந்ததால் தான், நிலவளமோ, நீர்வளமோ, வெற்றிகளோ, சாம்ராஜ்யத்தின் பெருகிப் பரந்த நிலையோ பல நூற்றாண்டு காலமாக அவர்களைக் கெடுக்க முடியாமல் இருந்தது; மற்ற எந்தக் குடியரசிலும் காணாத ஆசார ஒழுக்கங்களையும் அவர்கள் நிலை நிறுத்தி வந்தார்கள்.

அரசாங்கம் அல்லது தனிப்பட்ட மனிதர்களின் சாதனைகளினால் ரோமாபுரி பெரும் பயன்களை