பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு அடிகளார்



794. “சில சட்ட விதிகளை நீக்குதல் இயலாது. ஆனால், பயன்படுத்துதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.”

795. “இன்றைய அரசியலை, தன்னல நயப்பும் உணர்ச்சியுமே இயக்குகின்றன.”

796. “இந்தியாவில் தவறுகளைப் பொறுத்தல்ல, எதிர்ப்பு, இயக்கங்கள். பாதிக்கப்பட்டவர்களின் கூச்சல் போடும் திறமையைப் பொறுத்தது.”

797. “இந்திய முதலாளிகள் பிரிவினை சக்திகளை வளர்க்கின்றனர், ஏழ்மையின் துன்பத்தால் துயருறுவோன் புரட்சியில் ஈடுபடாமல் இருக்க”

798. “இந்தியாவில் கட்சிகள் வளர்ந்துள்ளன. அரசியல் வளர வில்லை.”

799. “மனிதனை, மனிதனாக மதிப்பது ஒழுக்கம்.”

800. “ஒருமைப்பாட்டுணர்வு என்பது தவத்தின் தவம்.”

801. “சின்ன சின்ன செய்திகளில் காட்டப் பெறும் அக்கறையே பெரிய பெரிய சாதனைகளைச் செய்ய உதவி செய்யும்.”

802. “அதிகாரம் உடையவர்கள் நன்கொடை கேட்டால் கூட அது நிர்ப்பந்தான்.”

803. “தீமைகள் கொலுவிருந்து பாராட்டுக்கள் பெறும் யுகத்தில் நல்லன நிகழ்தல் அருமை.”

804. “மருந்தாகப் பயன்படும் கோபம், தீதன்று. வரவேற்கத்தக்கது.”

805. “ஒவ்வொருவரும் தம் ஆற்றல் முழுவதையும் உழைப்பாக மாற்றினால் வளம் பெருகும்."