பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு அடிகளார்



818. “மண்ணில் குறை இல்லை! எந்த மண்ணையும் மனிதன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.”

819. “மண்ணில் விளையும் பொருள்களில் மனிதனுக்குப் பயன்படாத கழிவுகளையே மண் விரும்புகிறது. கழிவுப் பொருள்களையும் ஆக்கமாக மாற்றும் ஆற்றல் மண்ணுக்கு இருக்கிறது.”

820. “மனிதரில் கடையாய மனிதரை மேம்பாடுறச் செய்தலிலேயே ஞானியின் அருமை வெளிப்படும்.”

821. “நிலம் சமூகத்திலிருந்து குறைவாகப் பெற்றுக் கொள்கிறது. நிறைய திருப்பிக் கொடுக்கிறது. இதுவே நியதி. மனிதன் சமூகத்திலிருந்து நிறைய எடுத்துக் கொள்ளவே விரும்புகிறான்.”

822. “பேணப்படுபவள் பெண்; மற்றவர்களைப் பேணிப் பாதுகாப்பவள் பெண்.”

823. மனிதன் எளிதில் மறக்க மறுக்கிறான், ஆனால் பல நன்மைகளை மறந்து விடுகிறான். நன்றல்லாததை மறக்க மறுக்கிறான்.”

824. “பெண்களுக்கே, பெண்ணைப் பெருமைப் படுத்தத் தெரியவில்லை.”

825. “பெண்கள், தம் இனப்பகை உடையவர்கள்.”

826. “மாப்பிள்ளைக்கு (ஆணுக்கு) வாய்க்கும் மாமியார் நல்லவள்! ஆனால் பெண்ணுக்கு அப்படிப் பட்ட மாமியார் வாய்ப்பது அரிது.”

827. “மனிதன் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது. காரண, காரியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.”