பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு அடிகளார்



908. “மூன்றுகால் ஒட்டம் என்று ஒன்று உண்டு. உடன்பாடில்லாதவரை அனைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது போன்றது.”

909. “வாழ்க்கையில் தடைகள் ஏற்படுவது வளர்க்கும் அருளிப்பாடேயாம்.”

910. “படித்தவர்களே சமூகநிகழ்விற்குப் பொறுப் பேற்கிறார்கள். இன்றைய சமூக நிகழ்வு நன்றாக இல்லை. ஆதலால், ஆசிரியர்கள் தம் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை.”

911. “ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பது உண்மையல்ல.”

912. “கடவுள் நம்பிக்கை, வாழ்க்கைக்குத் துணை செய்யாத பொழுது நாஸ்திகம் தோன்றுகிறது.”

913. “நாஸ்திகம் கடவுள் இல்லை என்பதில்லை. ஆரிய மத நூல்களை ஆராய்ந்தவர்களுக்குக் கிடைத்த பட்டம்.”

914. “மாணவர்களிடத்தில் தாயினும் இனிய பாசம் இல்லாதவர்கள் ஆசிரியப் பணியில் வெற்றி பெற இயலாது.”

915. “நல்ல நூல்களை கற்பது அவசியம்.”

916. “கீதை, வர்ண வேற்றுமைகளைக் காப்பாற்றும் நூல்.”

917. “பாரதம் ஆதிபத்திய சண்டையை விவரிக்கும் நூல்.”

918. “எரியாத வேள்வித் தீயை முயன்று எரிய வைத்து மனநிறைவு கொள்வது போல, சமுதாய சீர்திருத்தத்திலும் முயற்சி தேவை.”