பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

113



1057. “சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்பவர்கள் தீவிர கட்சி சார்புகளை மேற்கொள்ளுதல் கூடாது.”

1058. “தலைவர் காமராசர் அவர்கள் தோற்ற 1967க்குப் பிறகே நாம் அரசியல் கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. பாராட்டுதலுக்குரிய டாக்டர் கலைஞர் நம்மை மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்வதில் ஆர்வம் காட்டி உதவியபோது கூட, அரசியல் பணிக்கு அழைத்தாரே தவிர, கட்சி அரசியலுக்கு ஈடுபடுத்த விரும்பவில்லை.”

1059. “குறிக்கோள் வழிப்பட்ட செயற்பாடுகள் ஆழப்படும்பொழுது அகலம் குறைகிறது. இது விருப்பு, வெறுப்பின் பாற்பட்டதல்ல. இதுவே இன்றைய நமது நிலை.”

1060. “புதியன காணும் ஆர்வமே வளர்ச்சிக்கு வித்து.”

1061. “தன்னைச் சேர்ந்தாரைத் திருத்த இயலாமல் மற்றவர்கள் மீது சினமுறுதல் தவறு. செயலாண்மையற்ற நிலை.”

1062. “மக்களை வளர்ச்சிக்கு ஆயத்தப்படுத்துதல் முதற்பணி.”

1063. “மக்களின் அறியாமையை எதிர் நோக்கில் திருத்துதல் இயலாது. அவர்கள் மகிழும் உணவு, உடை, முதலியன வழங்கிடும் உடன்பாட்டுப் பணிகள் மூலம்தான் இயலும்.”

1064. “தன்னை ஒழுங்குப்படுத்திக் கொள்வதில் வெற்றியின் இரகசியம் பொதிந்துள்ளது.”

த-8