பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு அடிகளார்



1065. “ஆரவாரமாக பேசுவது” - சுறுசுறுப்பான வாழ்க்கை என்று கருதுவது தவறு. செயற்பாட்டில் தான், சோம்பலின்மையைக் காண இயலும்.”

1066. “ஒன்றை, கொள்கையென விவாதத்திற்கு வைப்பதே தவறு என்றால், கருத்து வளர்ச்சி ஏற்படாது.”

1067. “குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள் நல்லவர்களாதல் அரிது.”

1068. “தான் கொண்ட முடிவுகளையே வற்புறுத்த நினைப்பவர்களின் செவிப் புலன் வேலை செய்யாது.”

1069. “கூட்டு வாழ்க்கை சிறப்புற, மற்றவர் சொல்லுவதைத் தடையின்றிக் கேட்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடையிலாச் செவிகள் அமைந்துள்ளன.”

1070. “சில கூறுதலும் பல கேட்டலும் வாழ்க்கைக்கு நல்லது.

1071. “பொதுவாக மானுடச் சாதியின் அறிவார்ந்த பொறிகள் புலன்கள் அறிவார்ந்த நிலையில் இயங்காமல் நுகர்வு நிலையிலேயே இயங்குகின்றன.”

1072. “சிந்தித்தல், ஆய்வு செய்தல், கூறுதல் முதலியன விரைந்து நிகழவேண்டும் என்பதனாலேயே உடலமைப்பில் அறிவுப் பொறிகள். நீண்ட இடைவெளி இவைகளுக்கிடையில் இல்லை.”

1073. “வயிறும் பாலுறுப்புக்களும் இயங்கும் அளவுக்கு மூளை இயக்கம் பெறாதது மனித குலத்தின் குறையே."